sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை

/

 திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை

 திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை

 திருமணத்தை மீறிய உறவு: பெண் எஸ்.ஐ., தற்கொலை


ADDED : டிச 15, 2025 04:59 AM

Google News

ADDED : டிச 15, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மாதா, 31. இவர், அம்பத்துார் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தன் இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், அந்தோணி மாதா தன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த அம்பத்துார் போலீசார், அந்தோணி மாதாவின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

கடந்த 2021ம் ஆண்டு அந்தோணி மாதா, எஸ்.ஐ.,க்கு பயிற்சி பெற்றபோது, ரஞ்சித் குமார், 30, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் குமார், தற்போது மீஞ்சூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.

ரஞ்சித் குமாருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவருடன் அந்தோணி மாதா பழகி வந்தார். இந்நிலையில், இருவருக்கும் இடையே, சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உளைச்சலில் இருந்த அந்தோணி மாதா, நேற்று முன்தினம் இரவு, ரஞ்சித் குமாருக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித் குமார், அம்பத்துார் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க, அம்பத்துார் போலீசார் சென்று பார்த்தபோது, அவர் இறந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us