/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது
/
சிறுமியிடம் சீண்டல்: சிலம்பம் மாஸ்டர் கைது
ADDED : பிப் 06, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை: சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சிலம்பம் மாஸ்டரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நீலாங்கரையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 36. சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார். கடந்த 1ம் தேதி, ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு, சிலம்பம் சுற்றும் சிறுவர் - சிறுமியரை அழைத்துச் சென்றுள்ளார்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பும்போது, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி, அழுது கொண்டே, நடந்த சம்-பவம் பற்றி பெற்றோரிடம் கூறினார்.
பெற்றோர் அளித்த புகாரின்படி, திருவான்மியூர் மகளிர் போலீசார், நேற்று திருநாவுக்கரசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

