sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அமைந்தகரை தரைப்பால பணி மந்தம்: வெள்ளம் சூழும் அவலம்

/

 அமைந்தகரை தரைப்பால பணி மந்தம்: வெள்ளம் சூழும் அவலம்

 அமைந்தகரை தரைப்பால பணி மந்தம்: வெள்ளம் சூழும் அவலம்

 அமைந்தகரை தரைப்பால பணி மந்தம்: வெள்ளம் சூழும் அவலம்


ADDED : டிச 09, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம்: ஆமை வேகத்தைவிட மிகமந்த நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல் கூவம் தரைப்பாலம் பணிகள் பல மாதமாக நடப்பதா ல், சூளைமேடு, அரும்பாக்கம் பகுதி, மழைக்காலத்தில் வெள்ளம் சூழும் நிலை உள்ளது.

அண்ணா நகர் மண்டலம், 106 - 107 வார்டுகள், அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெருவில் வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.

நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.

சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் இக்கால்வாயில் பழைய தரைப்பாலத்தை இடித்து, ஆறு மாதங்களுக்கு மேல், புதிய தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடக் கின்றன. பணிகள் துவங்கி பல மாதங்களாகியும், ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் கடும் அவதியடைக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:

விருகம்பாக்கம் கூவம் தரை ப்பாலங்களின் நிலைமை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், ஆறு தரைப்பாலங்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி கையில் எடுத்தது.

முதற்கட்டமாக, மூன்று பணிகளை துவங்கியது. அதில், சூளைமேடு மாதா கோவில் தெரு கூவம் தரைப்பாலம் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

ஆனால், அதேபோல் துவங்கிய தமிழர் வீதி கூவம் தரைப்பால பணிகளில், துாண்கள் கூட அமைக்காமல் எந்த முன்னேற்றமும் இல்லை.

பணிக்காக எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலை அடைக்கப்பட்டதால், அரும்பாக்கம், சூளைமேடு மக்கள் பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைக்காலம் துவங்கியதால், பணிகள் கிடப்பில் போடவாய்ப்புள்ளதால், வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us