ADDED : ஆக 03, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிப்பறி திருடர்கள் கைது
சோழவரம், கம்மவார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதாசிவம், 45, இருசக்கர வாகனத்தில் காவாங்கரை சந்திப்பில், நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூவர், சதாசிவத்தை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி, சரமாரியாக அடித்து, அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்தனர்.
புழல் போலீசார் விசாரித்து, காவாங்கரை பகுதியை சேர்ந்த பூவரசன், 25, சஞ்சய்குமார், 20, விளங்காடுபாக்கம் அனீஸ், 19, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.