sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாயை அடித்து கொன்ற மகன் கைது

/

தாயை அடித்து கொன்ற மகன் கைது

தாயை அடித்து கொன்ற மகன் கைது

தாயை அடித்து கொன்ற மகன் கைது


ADDED : ஆக 22, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 22, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம், ஆத்திரத்தில் தாக்கியதில் தாய் இறந்ததால், மகன் கைது செய்யப்பட்டார்.

மாதவரம், பொன்னியம்மன்மேடு, திருப்பதி தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் பரிமளா, 60. சில ஆண்டுக்கு முன் இவரது கணவர் செல்வராஜ் உடல்நிலை சரியின்றி இறந்தார்.

பரிமளாவின் ஒரே மகன் ரூபக், 35, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாதம் இருமுறை சென்னை வந்து, தாயை பார்த்து செல்வார். கடந்த ஒன்றாம் தேதி, பரிமளாவை பார்க்க வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பணம் விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரூபக், தாயின் முடியை பிடித்து சுவற்றில் தள்ளியுள்ளார். இதனால் தலையில் காயமடைந்த பரிமளா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த பரிமளா, நேற்று இறந்தார்.

இதையடுத்து மாதவரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ரூபக்கை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us