/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்
/
தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்
தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்
தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்
ADDED : மார் 19, 2026 05:27 PM

சென்னை: தென்மேற்கு மண்டல கராத்தே போட்டியில், வண்டலுார் கிரசண்ட் பல்கலை மாணவி வெண்கல பதக்கம் வென்று, மாநிலத்தின் முதல் மாணவியாக, அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில், தென்மேற்கு மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபலில் நேற்று நிறைவடைந்தது.
போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின், 112 பல்கலைகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
பல்வேறு சண்டை பிரிவுகளில், வயது வாரியாக போட்டிகள் நடக்கின்றன. இதில், பெண்களுக்கான 65 கிலோ 'குமிட்' பிரிவில், சென்னையை அடுத்த வண்டலுார் கிரசண்ட் பல்கலை மாணவி வர்ஷா,....... திறமையை வெளிப்படுத்தி, வெண்கலம் பதக்கம் வென்றார்.
மாநிலத்தின் முதல் மாணவியாக பதக்கம் வென்றதுடன், அகில இந்திய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
மாணவியை, போட்டியின் கண்காணிப்பாளர், கிரசண்ட் பல்கலை விளையாட்டுத்துறை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.
***

