/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : அக் 27, 2024 08:42 PM
சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, 11,176 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,092 பஸ்களுடன்,இன்று, நாளை, நாளை மறுநாள் என, மூன்று நாட்களுக்கு, 4,900 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழகம் முழுதும் மற்ற ஊர்களுக்கு, 2,910 சிறப்பு பஸ்கள் என, 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பறப்படும்.
எங்கிருந்து எங்கு?
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்துார், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், விருத்தாச்சலம், அரியலுார், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்களும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்களும் புறப்படும்.
பஸ் நிலையங்களுக்கு பஸ்
இன்று முதல் இயக்கப்படும் வெளியூர் செல்வோருக்கு வசதியாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையங்களுக்கு 300 இணைப்பு பஸ்களை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
அதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்கு வசதியாக, நவ., 2, 3 ஆகிய நாட்களில், மாலை மற்றும் இரவில், 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.