/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
/
திருச்சி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : ஆக 14, 2025 11:51 PM
சென்னை :பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 17ம் தேதி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சுதந்திர தினத்தை தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, தாம்பரம் - திருச்சி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு, நேற்று இரவு 11:10 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இதேபோல், திருச்சியில் இருந்து வரும் 17ம் தேதி இரவு 10:50 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், மேல்மருவத்துார் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.