ADDED : ஜன 14, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பயணியர் நெரிசலை கருத்தில் வைத்து, போத்தனுாரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம், போத்தனுாரில் இருந்து, வரும் 18ம் தேதி காலை 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயிலில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

