sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைநீர் சேகரிக்க 'ஸ்பாஞ்ச் பூங்கா' பாடி, வியாசர்பாடியில் அமைகிறது

/

மழைநீர் சேகரிக்க 'ஸ்பாஞ்ச் பூங்கா' பாடி, வியாசர்பாடியில் அமைகிறது

மழைநீர் சேகரிக்க 'ஸ்பாஞ்ச் பூங்கா' பாடி, வியாசர்பாடியில் அமைகிறது

மழைநீர் சேகரிக்க 'ஸ்பாஞ்ச் பூங்கா' பாடி, வியாசர்பாடியில் அமைகிறது


ADDED : செப் 16, 2025 01:12 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;சென்னையில் பாடி, வியாசர்பாடி, துரைப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் மழை நீர் சேகரிப்புக்காக, 'ஸ்பாஞ்ச் பூங்கா' அமைக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

சென்னையில், மழைநீரை சேகரிக்க அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில், பல்வேறு பகுதிகளில் மழை நீர் சேகரிப்புக்காக, 'ஸ்பாஞ்ச் பூங்கா'க்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வும் ஈடுபட்டு உள்ளது.

இதன்படி, சென்னை பாடி இளங்கோ நகர் பகுதியில், 4.79 ஏக்கர், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில், 4.17 ஏக்கர், துரைப்பாக்கம் தலைமை செயலக காலனி பகுதியில், 5.17 ஏக்கர் பரப்பளவில் மூன்று, 'ஸ்பாஞ்ச் பூங்கா'க்களை அமைக்கப்பட உள்ளன.

இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us