/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் - புளியந்தோப்பில் டிமிக்கி; வேளச்சேரியில் விருந்து
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் - புளியந்தோப்பில் டிமிக்கி; வேளச்சேரியில் விருந்து
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் - புளியந்தோப்பில் டிமிக்கி; வேளச்சேரியில் விருந்து
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் - புளியந்தோப்பில் டிமிக்கி; வேளச்சேரியில் விருந்து
UPDATED : ஜூலை 31, 2025 02:38 PM
ADDED : ஜூலை 31, 2025 12:38 AM

சென்னை, புளியந்தோப்பில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேநேரம் வேளச்சேரியில் நடந்த முகாமில், அலுவலர்களுக்கு 'பிரியாணி'யும், மக்களுக்கு 'லெமன் சாதம், புளி சாதம், தயிர்சாதம்' என, விதவிதமான உணவு வழங்கப்பட்டது.
மாநகராட்சியின் 72வது வார்டுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், புளியந்தோப்பு சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
மகளிர் உரிமைத் தொகை மற்றும் பட்டா கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் திண்டாடினர். பந்தல், நாற்காலி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால், மனு கொடுக்க வந்த மக்கள் வெயிலில் தவித்தனர்.
முகாமை பார்வையிட வந்த, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சரியான முன்னேற்பாடுகள் செய்யாதது ஏன் என, அதிகாரிகளை கடிந்து கொண்டார். தேவையான வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டார்.
Advertisement
விருந்து
மாநகராட்சியின் 177 வது வார்டான வேளச்சேரியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. இதில், 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், 13 துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் உட்பட, 350 பேர் இருந்தனர். இவர்களுக்கான டிபன், மதிய உணவு, டீ, பிஸ்கெட் உள்ளிட்டவை சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும்.
நேற்று நடந்த முகாமில், டிபன், டீ, பிஸ்கெட் சுகாதாரத்துறை வழங்கியது. மதியத்தில், வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன், ஊழியர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 வழங்கினார். மனுவுடன் காத்திருந்த பொதுமக்களுக்கு, புளிசாதம், லெமன் சாதம், தயிர் சாதம் வழங்கினார்.