sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநில அளவில் தரம் உயரும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்

/

மாநில அளவில் தரம் உயரும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்

மாநில அளவில் தரம் உயரும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்

மாநில அளவில் தரம் உயரும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்


ADDED : ஜன 10, 2024 12:28 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் 'நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மனநல சேவை' திட்டத்தின் இரண்டாவது பிரிவை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் அளித்த பேட்டி:

இந்த மனநல சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படும். இவற்றில், மனநல மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆற்றுப்படுத்துனர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2022ல் துவக்கப்பட்டு, மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 40,000த்துக்கும் மேற்பட்டோர் மனநல ஆலோசனை பெற்று உள்ளனர்.

இதில், 70 சதவீத அழைப்புகள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக, மன உளைச்சல், அதீத மனக்கவலை, உறவு சார்ந்த சிக்கல்கள் மற்றும் இதர உளவியல் பிரச்னைகள் சார்ந்த அழைப்புகள் அதிகம் வந்துள்ளன.

இதற்காக, மத்திய அரசின் விருதையும் பெற்றுள்ளோம். இதன் இரண்டாவது பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பாகத்தில், 25 மனநல டாக்டர்கள், ஆண்டுக்கு 18 என, 54 முதுநிலை மருத்துவ மாணவர்கள், மூன்று உளவியலாளர்கள் மற்றும் 10 முதுகலை உளவியல் மாணவர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மனநல காப்பகம், தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனமாக, மாநில அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளது.

இதேபோல், 104 மருத்துவ சேவை மையத்தில், 'நீட்' தேர்வு எழுதும் மாணவர்கள், பொறியியல் மற்றும் கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தற்கொலை மேற்கொள்ளும் எண்ணம் தடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us