/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில டென்னிஸ் தொடர் சென்னை ஜோடி சாம்பியன்
/
மாநில டென்னிஸ் தொடர் சென்னை ஜோடி சாம்பியன்
ADDED : அக் 08, 2025 02:27 AM
சென்னை, சென்னையில் நடந்த மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், சென்னையின் லட்சுமி பிரியா, லாவண்யா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான மாநில டென்னிஸ் தொடர் நடந்தது. லீக் முறையில் போட்டிகள் நடந்தன.
மகளிருக்கான இரட்டையர் சுற்றில், சென்னையின் லட்சுமி பிரியா, லாவண்யா ஜோடி, அனைத்து போட்டிகளிலும் வென்று, 6 புள்ளிகளுடன் அந்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிருதுளா - விதுலா ஜோடி 2 வெற்றி, 1 தோல்வி என, 4 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தின் மிருதுளா - தியாதர்ஷினி ஜோடி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஓஜஸ் தேஜோ - அனிஷ் ஜோடி 6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றனர்.
கோவை மாவட்டத்தின் தருண் விக்ரம் - அகிலேஷ் ஜோடி, 4 புள்ளிகளுடன் வெள்ளியும், கோவை மாவட்டத்தின் கவின் கார்த்திக் - ரக் ஷித் தருண் ஜோடி வெண்கல பதக்கமும் வென்றனர்.