sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர் ஓட்டிய கார் சாலையில் 'பல்டி' போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்

/

மாணவர் ஓட்டிய கார் சாலையில் 'பல்டி' போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்

மாணவர் ஓட்டிய கார் சாலையில் 'பல்டி' போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்

மாணவர் ஓட்டிய கார் சாலையில் 'பல்டி' போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்


ADDED : டிச 08, 2024 12:22 AM

Google News

ADDED : டிச 08, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், செங்குன்றத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். இவர், நேற்று மாலை தோழியுடன் அண்ணா நகர், டவர் பூங்காவிற்கு 'டாடா டிகோர்' காரில் வந்துள்ளார்.

சாலையோரத்தில் காரை நிறுத்தி, காரில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பொதுமக்களுக்க இடையூறாக சாலையில் கார் நின்றதால், அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் காரின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றமடைந்த மாணவன், உடனடியாக காரை இயக்கி அங்கிருந்து வேகமாக தப்பினார். அங்கிருந்து சென்ற கார் தாறுமாறாக ஓடி, 'டபிள்யூ' பிளாக் 7வது தெரு அருகில் திரும்பும்போது, சாலையோரம் நின்றிருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்து நின்றது.

அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காருக்குள் 'ஏர்பேக்'கில் சிக்கிய இருவரையும் மீட்டனர். இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து ஏற்படுத்திய கார் மோதியதில், 'ஹோண்டா டியோ, ஸ்கூட்டி, அப்பாச்சி, யூனிகான்' ஆகிய நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

காரை பறிமுதல் செய்த போலீசர், விபத்து ஏற்படுத்திய மாணவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சில மணிநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us