sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்

/

 அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்

 அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்

 அரசு பள்ளியில் துாய்மையற்ற கழிப்பறை; சுகாதார சீர்கேடால் தவிக்கும் மாணவர்கள்


ADDED : டிச 29, 2025 07:09 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்: மேடவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள கழிப்பறைகள், பராமரிப்பின்றி அசுத்தமான நிலையில் உள்ளதால், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இந்த ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளக்கல் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில், இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது.

இரு பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளிலும், தலா 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள பள்ளியின் கழிப்பறைகள், பராமரிப்பின்றி, பயன்படுத்துவதற்கே லாயக்கற்ற நிலையில், துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறையை பயன்படுத்தும் மாணவர்கள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர். பல மாணவர்கள் கழிப்பறையின் பின்புறம் உள்ள திறந்தவெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சுத்தம் செய்ய ஆட்கள் வருவதே இல்லை. எப்பொழுதாவது வந்து, அரை குறையாக கடமைக்கு சுத்தம் செய்து செல்வதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வறுமையில் வாடும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வசதியின்றி, அரசு பள்ளியே கடைசி நம்பிக்கையாக சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதாரமற்ற கழிப்பறைகளால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய் தொற்றால், அவர்களின் உடல்நிலையும், அவர்களின் கற்றலும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us