sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மணலிபுதுநகர் மதுபான கடையால் மாணவியர், பெண்கள் அச்சம்

/

மணலிபுதுநகர் மதுபான கடையால் மாணவியர், பெண்கள் அச்சம்

மணலிபுதுநகர் மதுபான கடையால் மாணவியர், பெண்கள் அச்சம்

மணலிபுதுநகர் மதுபான கடையால் மாணவியர், பெண்கள் அச்சம்


ADDED : பிப் 14, 2025 12:23 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர் :மணலிபுதுநகரில், பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு சர்ச் உள்ளது. இங்கு, குழந்தை வரம் வேண்டி, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வர்.

விழாக்காலங்களில், கூட்டம் கட்டுக்கடங்காது. அதன் அருகேயே செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்நிலையில், சர்ச் மற்றும் பள்ளி அமைந்துள்ள, பொன்னேரி நெடுஞ்சாலையின் அணுகு சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு, அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால், 'குடி'மகன்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். மாலை வேளைகளில், மது அருந்தி ரகளை செய்யும் போதை ஆசாமிகளால், பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, டாஸ்மாக் கடையை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதென, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us