sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பேச்சு

/

ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பேச்சு

ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பேச்சு

ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் பேச்சு


ADDED : ஏப் 12, 2025 09:48 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறிவைத்து, அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடக்கின்றன,'' என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்தினேஷ் மோடக் கூறினார்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கிளெனீகல்ஸ் மருத்துவமனை இணைந்து, நேற்று, இ.சி.ஆர்., அக்கரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், 'தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்' என்பதை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், 16 கி.மீ., துாரம் பேரணி சென்றனர். சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்தினேஷ் மோடக், பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:

தாம்பரம் ஆணையரகம் எல்லையில், 50 சதவீதத்திற்கும் மேல் இருசக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன. அதிகம் படித்தவர்களிடம் கூட, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஹெல்மெட் அணிவது, உயிர் இழப்புகளை தடுக்க உதவும். பீக்ஹவர்சில் கனரக வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தி, விபத்துகளை குறைத்து வருகிறோம்.

ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறிவைத்து, அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதில், அவர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்யும் குற்ற சம்பவங்கள் சவாலாக உள்ளன. அதிரடி சோதனையில், 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். ரவுடிகள் மாநகருக்கு வெளியே இருக்கின்றனர். குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும், காவல்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தாம்பரம் கூடுதல் போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி, போக்குவரத்து துணை கமிஷனர் சமய்சிங்மீனா, மருத்துவர் நிகில்பீட்டர் சிம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us