sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்

/

இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்

இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்

இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்


ADDED : ஏப் 17, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான 'இந்திய ஓபன் தடகள' போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி மாலை நிறைவடைந்தது.

தமிழகம், ஹரியானா, டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 460 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர்.

இதில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கிட்சன் 10.73 வினாடியில் முதலிடத்தை பிடித்தார். அதேபோல் 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவில் தொண்டபதி மிருத்யம் முதல் இடத்தையும், தமிழக வீரர் வருண் ஒரியா மனோகர் இரண்டாம் இடத்தையும், மற்றொரு தமிழக வீரர் நித்தின் அருணன் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

உயரம் தாண்டுதலில் ஆந்திராவின் ஷேக் மொய்தீன் முதலிடத்தையும், தமிழகத்தின் முகேஷ் அசோக்குமார் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

நீளம் தாண்டுதலில் உத்தர பிரதேசம் ஆதித்யா குமார், ரயில்வே ஸ்போர்ட்ஸ் சுவாமிநாதன், தமிழகத்தின் சாரோன் ஜஸ்டஸ் ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர்.

மும்மூறை தாண்டுதலில் கேரளாவின் கார்த்திக், தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர்.

ஆண்களுக்கான கோல் ஊன்றி தாண்டுதல் பிரிவில், தமிழகத்தின் கவுதம் மற்றும் யுகேந்திரன் முதல் இரண்டு இடத்தையும் கைப்பற்றினர்.

குண்டு எறிதல் பிரிவில் பஞ்சாப் வீரர் தாஜிநதர்பால், தமிழகத்தின் பாலாஜி ஆகியோர், முதல் இரண்டு இடங்களை வென்றனர்.

இப்போட்டியில் தேர்வாகியோர், இம்மாதம் 21 - 24 வரை நடக்கும், 28வது தேசிய சீனியர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.






      Dinamalar
      Follow us