sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புறநகரில் இயக்கப்படும் 'டப்பா' பஸ்கள் கூரை வழியே நீர் கொட்டுவதால் அவதி

/

புறநகரில் இயக்கப்படும் 'டப்பா' பஸ்கள் கூரை வழியே நீர் கொட்டுவதால் அவதி

புறநகரில் இயக்கப்படும் 'டப்பா' பஸ்கள் கூரை வழியே நீர் கொட்டுவதால் அவதி

புறநகரில் இயக்கப்படும் 'டப்பா' பஸ்கள் கூரை வழியே நீர் கொட்டுவதால் அவதி


ADDED : நவ 13, 2024 02:54 AM

Google News

ADDED : நவ 13, 2024 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்:சென்னை புறநகரில் இயக்கப்படும் பேருந்துகள் கடும் மோசமாக சேதமடைந்துள்ளதால், மழை நேரத்தில் தண்ணீர் உள்ளே ஒழுகி, பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை புறநகரான செங்குன்றம், சோழவரம், காரனோடை, கும்மனுார், அலமாதி, மோரை மற்றும் ஞாயிறு சுற்றுவட்டாரத்தில் இயங்கும் மாநகர பேருந்துகள், பெரும்பாலும் ஓட்டை உடைசல்களாகவே உள்ளன.

குறிப்பாக, செங்குன்றம் - விச்சூர் வரையிலான தடம் எண் '57இ' பேருந்து மோசமான நிலையில் உள்ளது. நேற்று பெய்த தொடர் மழைக்கு, இந்த பேருந்தின் உள்ளேயும் மழை பெய்தது. கூரை வழியே உட்புகுந்த மழைநீரால் பயணியர் இருக்கையில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இருக்கைகள் அனைத்தும் நனைந்து, உட்கார முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பயணியர் சிலர் கூறுகையில், 'சென்னை புறநகர்களான ஞாயிறு, மோரை, செங்குன்றம் முதல் சோழவரம் வரையிலான சாலைகள் படுமோசமாக உள்ளன. இந்நிலையில் மாநகர பேருந்துகளும், தகர டப்பாக்களாகவே உள்ளன.

மழைக் காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது, குடையுடன் தான் பயணிக்க முடியும். பயணியர் நலன் கருதி, இந்த பகுதிகளுக்கு நல்ல நிலையிலுள்ள பேருந்துகளை இயக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us