sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'சஸ்பெண்ட்' உத்தரவு வாபஸ் கோரி 'டாஸ்மாக்' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

'சஸ்பெண்ட்' உத்தரவு வாபஸ் கோரி 'டாஸ்மாக்' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

'சஸ்பெண்ட்' உத்தரவு வாபஸ் கோரி 'டாஸ்மாக்' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

'சஸ்பெண்ட்' உத்தரவு வாபஸ் கோரி 'டாஸ்மாக்' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 13, 2024 02:34 AM

Google News

ADDED : நவ 13, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மது பாட்டிலுக்கு, 10 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விற்றால், கடைப்பணியில் உள்ள அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில், அனைத்து டாஸ்மாக் சங்கங்கள் கூட்டமைப்பு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் மது கடை ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை, பணிநிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்.

கூடுதல் விலைக்கு மது விற்றால், கடை பணியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச்சங்க மாநில செயலர் அரியகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள், காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்திற்குள் அமர்ந்து, பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us