ADDED : ஜன 09, 2024 12:30 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி தேர்வழி கிராமத்தில் 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. கிராமத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், பள்ளி மாணவியர், பெண்களை கேலி கிண்டல் செய்தல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக இக்கடை உள்ளது.
கடையை மூட வேண்டும் என, டிச., 8ம் தேதி, கிராம பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மாத காலத்திற்குள் கடை இடம்மாற்றம் செய்யப்படும் என அரசு தரப்பினர் தெரிவித்திருந்தனர். ஒரு மாத காலம் முடிந்த நிலையிலும் நடவடிக்கையில்லை. இதனால், தேர்வழி ஊராட்சி தலைவர் கிரிஜா தலைமையில் 20 பெண்கள் நேற்று கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி போலீசார் சமரசம் பேசினர். டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வரும் 31ம் தேதிக்குள் கடை இடம் மாற்றம் செய்யப்படும் அல்லது மூடப்படும் என, எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.