ADDED : பிப் 04, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்,
கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 44; ஆசிரியர். நேற்று காலை, பள்ளி செல்வதற்காக, 'டிவிஎஸ் ஸ்கூட்டி'யில், வல்லுார் - காட்டுப்பள்ளி சாலையில் சென்றபோது, எண்ணுாரில் இருந்து வந்த லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்நாராயணன், 31, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

