ADDED : நவ 17, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,
மீனம்பாக்கம் - திரிசூலம் இடையே, நேற்று மாலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திருநெல்வேலி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு இறந்தார்.
போலீசார், அவரது உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த நபர் யார், எந்த ஊர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.