/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா எண்ணெய் கடத்தல்; வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
/
கஞ்சா எண்ணெய் கடத்தல்; வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : செப் 23, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கஞ்ச எண்ணெய் கடத்திய, ஹைதராபாதைச் சேர்ந்த ராஜு, 35, என்பவர் வண்ணாரப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்; 2 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''ராஜு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே அவருக்கு, 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.