/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால் போட்டி தஞ்சாவூர் அணி முதலிடம்
/
மாநில வாலிபால் போட்டி தஞ்சாவூர் அணி முதலிடம்
ADDED : நவ 01, 2025 02:02 AM
சென்னை: சென்னையில் நடந்து வரும் மாநில விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், தஞ்சாவூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழகத்தில் இயங்கிவரும் எஸ்.டி. ஏ.டி., விளையாட்டு விடுதிகளுக்கிடையிலான மாநில வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், தமிழகத்தின் எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதிகளைச் சார்ந்த, 12 ஆண்கள் அணிகள், யு - 14, யு - 17, யு - 19 ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டியிட்டன. போட்டிகள் லீக் முறையில் நடந்தன.
இதன் இறுதி லீக் சுற்றுகள், நேற்று முன்தினம் இரவு நடந்தன. இதில், தஞ்சாவூர் மாவட்ட அணி, 14 மற்றும் 19 வயதுக்குட்பட் டோர் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், திருச்சி அணி முதலிடம் பிடித்தது.

