/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த சிறுவன்
/
தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த சிறுவன்
ADDED : பிப் 04, 2026 05:58 AM
அண்ணா நகர்: தண்ணீர் என நினைத்து 'பெயின்ட்' அடிக்க பயன்படும் தின்னரை குடித்த சிறுவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அரும்பாக்கத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன், பெற்றோருடன், நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகருக்கு வந்துள்ளார்.
'ஸ்கேட்டிங் பார்க்' அருகில், சாலையோர கடையில் இருந்த நொறுக்கு தீணியை சிறுவனுக்கு பெற்றோர் வாங்கி கொடுத்தனர். பின், பெற்றோர் அசந்த நேரத்தில், தண்ணீர் என நினைத்து, கடையில் 'பெயின்ட்' அடிப்பதற்காக பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்த 'தின்னரை' குடிக்க முயன்றார்.
இதை கவனித்த பெற்றோர், தின்னரை கீழே துப்பவைத்து, மருத்துவமனையில் சேர்த்தனர். பின் சிகிச்சை பெற்று சிறுவன் வீடு திரும்பினார். இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

