/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்
/
வீடு புகுந்து திருடியவர் சிக்கினார்
ADDED : செப் 25, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம், 57; போக்குவரத்து தொழில்நுட்ப ஊழியர். இவர், கடந்த 19ம் தேதி, அரக்கோணத்தில் உள்ள அவரது மகளை பார்க்க குடும்பத்துடன் சென்றார்.
மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையின் 'ஆஸ்பெட்டாஸ்' கூரை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகையை திருடிச் சென்றிருந்தனர்.
இதுகுறித்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஆவடி, பொத்துார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 20, என்பவரை, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.