/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரை இல்லாத நிழற்குடை பயணியர் பெரிதும் அவதி
/
கூரை இல்லாத நிழற்குடை பயணியர் பெரிதும் அவதி
ADDED : ஜன 04, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மிக்ஜாம்' புயல் மழையில், பல இடங்களில் பயணியர் நிழற்குடைகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. தேனாம்பேட்டை, மெட்ரோ ரயில் நிலைய பயணியர் நிழற்குடையில் கூரையை காணவில்லை. இப்பகுதியில், தனியார் கல்லுாரி, முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு வரும் பயணியர், இந்த நிழற்குடையின் கீழ் நின்று பேருந்து பிடிக்கின்றனர். அதேபோல், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களிலும், பயணியர் நிழற்குடைகள் சேதமடைந்துள்ளன. பயணியர் வசதிக்காக, நிழற்குடைகளை விரைந்து சீர்செய்ய வேண்டும்.
- கனகராஜ், தேனாம்பேட்டை.