/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைமேம்பாலம் 4 திசைகளுக்கு செல்லும் வழியில் அமைகிறது
/
மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைமேம்பாலம் 4 திசைகளுக்கு செல்லும் வழியில் அமைகிறது
மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைமேம்பாலம் 4 திசைகளுக்கு செல்லும் வழியில் அமைகிறது
மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைமேம்பாலம் 4 திசைகளுக்கு செல்லும் வழியில் அமைகிறது
ADDED : டிச 09, 2025 05:26 AM

சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில், நான்கு திசைகளில் ஏறி இறங்கும் வகையில், நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், அடையாறு சர்தார் படேல் சாலையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் தான், பழைய மாமல்லபுரம் சாலைக்கு செல்ல முடியும்.
இங்கு அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதிக வாகனங்கள் செல்வதால், பழைய மாமல்லபுரம் சாலைக்கு வாகனங்கள் காத்திருந்து திரும்ப வேண்டும். இதனால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இந்த சந்திப்பில், மொத்தம் 60 கோடி ரூபாயில், 'எல்' வடிவ மேம்பாலம் கட்டும் பணிகள், 2023ல் துவங்கின. இப்பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அங்கிருந்த நடைமேம்பாலம் அகற்றப்பட்டது.
மேம்பால பணி முடிந்தும், நடைமேம்பாலம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க, 'கும்டா'விடம் நெடுஞ்சாலைத்துறை கேட்டிருந்தது.
இதன்படி முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நகரும்படிகள், மின்துாக்கி வசதியுடன் 20 கோடி ரூபாயில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய கைலாஷ் சந்திப்பில், கஸ்துாரிபாய் நகர் மேம்பால ரயில் நிலையம், சர்தார் பட்டேல் சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் விநாயகர் கோவில் பின் பகுதி என, நான்கு இடங்களில் ஏறி இறங்கும் வகையில், 370 அடி நீளம், 18 அடி அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படுறது.
இதில், அனைத்து இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் சர்தார் பட்டேல் சாலையில் ஏறி, இறங்கும் வகையிலும், இதர மூன்று இடங்களில் ஏறும் வகையில் நகரும்படிகள் அமைக்க ப்படும். மேலும், ஓ.எம்.ஆர்., தவிர இதர மூன்று இடங்களில் மின்துாக்கி வசதி இருக்கும்.
நடைமேம்பாலம் பணி, பிப்., மாதம் துவங்கும். அடையாறு கேன்சர் மருத்துவமனை சந்திப்பில், சிக்னல் இல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், இடம் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

