sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விசாரணைக்கு அழைத்தது மனித உரிமை மீறல் அல்ல இன்ஸ்பெக்டருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட்

/

விசாரணைக்கு அழைத்தது மனித உரிமை மீறல் அல்ல இன்ஸ்பெக்டருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட்

விசாரணைக்கு அழைத்தது மனித உரிமை மீறல் அல்ல இன்ஸ்பெக்டருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட்

விசாரணைக்கு அழைத்தது மனித உரிமை மீறல் அல்ல இன்ஸ்பெக்டருக்கு எதிரான உத்தரவு ரத்து செய்தது ஐகோர்ட்


ADDED : ஆக 28, 2025 12:22 AM

Google News

ADDED : ஆக 28, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டருக்கு எதிராக, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம், மயிலாப்பூரை சேர்ந்த விஜயகிருஷ்ணன் என்பவர், தன் மாமனார் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து, ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

அடமானமாக வைத்த சொத்து பத்திரங்களை வேணுகோபால் திருடிவிட்டதாக, விஜயகிருஷ்ணன், புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி, வேணுகோபாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

விசாரணைக்கு ஆஜரானபோது, சொத்து பத்திரங்களை விஜயகிருஷ்ணனிடம் திருப்பி கொடுக்கும்படி, புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., ஷஜிபா ஆகியோர் மிரட்டியதாக, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், வேணுகோபால் புகார் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணையம், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., ஷஜிபாவுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், இருவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் ஆஜராகி, ''விஜயகிருஷ்ணன் அளித்த புகாரின் உண்மை தன்மையை விசாரிக்கும் நோக்கில் மட்டுமே, வேணுகோபால் காவல் நிலையம் அழைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல், மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது, மனித உரிமை மீறல் ஆகாது. விசாரணையின்போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு, எந்த ஆதாரங்களும் இல்லை.

இன்ஸ்பெக்டர் ரவிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், 10,000 ரூபாய் அபராதம் விதித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us