sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை

/

ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை

ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை

ஒத்தையடி பாதையாக மாறிய நெடுஞ்சாலைகள் நெரிசலால் 5 ஆண்டுகளாக மக்கள் அவஸ்தை


ADDED : பிப் 28, 2024 12:27 AM

Google News

ADDED : பிப் 28, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்,மாதவரம் மூலக்கடை ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, 9 கி.மீ., துார மாதவரம் நெடுஞ்சாலை 80 அடி அகலமாக விரிவாக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக 11 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு நிதி ஒதுக்கி பணியை துவக்கியது.

இதில், மூலக்கடை சந்திப்பில் இருந்து, கிராண்ட்லைன் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டிற்கு பின், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பல்வேறு ஆக்கிரமிப்புகளால், இந்த சாலை ஒத்தையடி பாதையாக சுருங்கி போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது.

இதனால், கிராண்ட் லைன், வடகரை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிப்படுகின்றனர். மேலும், கிராண்ட் லைன், வடகரை, அழிஞ்சிவாக்கம், விளாங்காடு பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு ஆதி திராவிட நலத்துறை மேல்நிலைப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றில் 5,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தும் கேள்விக்குறியாகி உள்ளது.

அதே போல், செங்குன்றம் ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி எல்லை வரையிலான, சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையும், 4 கி.மீ., துாரத்திற்கு, ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது.

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றிய கிராமங்களின் போக்குவரத்திற்கு உதவும் இந்த சாலை, வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையையும் இணைக்கிறது.

மேற்கண்ட இரண்டு சாலையிலும், 'பேட்ச்' ஒர்க் என்ற பெயரில், 2 மாதத்திற்கு முன், நெடுஞ்சாலைத்துறை ஜல்லி கற்களை கொட்டி சென்றது. ஆனால், இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.

இதனால், சாலையில் சிதறி கிடக்கும் கற்கள், கனரக வாகன டயர்களில் பட்டு, பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும், கனரக போக்குவரத்து அதிகரிப்பால், அப்பகுதி துாசு மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், வீட்டின் கதவு, ஜன்னல்களை எப்போதும் மூடியே வைக்கின்றனர்.

பலர், பிளாஸ்டிக் திரைகளை தடுப்பாக பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுமக்களின் அவதி தொடர்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மேற்கண்ட சாலைகளின் அவல நிலைக்கு காரணம், உள்ளாட்சி, நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறையினர் தான்.ஆனால், பிரச்னை என்றால், போக்குவரத்து போலீசார் தான் மக்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். ஆக்கிரமிப்புகளுக்கு, மறைமுகமாக உதவும், மூன்று துறை அதிகாரிகள், சாலை விரிவாக்க திட்டம், மக்களின் பாதிப்புகள் குறித்து கண்டுகொள்வதில்லை.அவர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும், நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வருவதில்லை.இதனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல், விபத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்கதையாக உள்ளன.








      Dinamalar
      Follow us