sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்

/

நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்

நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்

நகராட்சி பழைய அலுவலகம் பயன்பாடு இல்லாமல் வீண்


ADDED : மார் 15, 2024 12:37 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி பழைய அலுவலகம், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.

சென்னை அடுத்த பூந்தமல்லி நகராட்சி அலுவலகம், பூந்தமல்லி கரையான்சாவடியில் இயங்கி வந்தது.

இங்கு இடநெருக்கடி ஏற்பட்டதால், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, 4.83 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு முதல், புதிய கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் காரணமாக, பழைய அலுவலகம் மூடப்பட்டது.

இது, தற்போது வரை திறக்கப்படாமல், பராமரிப்பின்றி வீணாகிறது.

பூந்தமல்லியில் காவல் நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள், இடவசதி இல்லாமல் இயங்குகின்றன.

நகராட்சியின் இந்த பழைய அலுவலக கட்டடத்தை, வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us