sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழமையான 'விக்டரி மெமோரியல்' கட்டடம் ரூ.24.20 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்

/

பழமையான 'விக்டரி மெமோரியல்' கட்டடம் ரூ.24.20 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்

பழமையான 'விக்டரி மெமோரியல்' கட்டடம் ரூ.24.20 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்

பழமையான 'விக்டரி மெமோரியல்' கட்டடம் ரூ.24.20 கோடியில் சீரமைப்பு பணி துவக்கம்


ADDED : பிப் 17, 2025 01:19 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், 1888ல் கட்டுமானம் துவங்கி, 1890ல் கட்டி முடிக்கப்பட்டு, 1893ல் விக்டரி மெமோரியல் கட்டடம் திறக்கப்பட்டது.

ராணுவ வீரர்கள், குதிரைகள் தங்கும் அறைகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத தளவாட பொருட்கள் பாதுகாத்து வைக்கும் இடமாக, இந்த கட்டடம் செயல்பட்டது.

சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், 5,500 சதுர அடியில் பரந்து விரிந்து பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக, விக்டரி மெமோரியல் கட்டடம், பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியாக, 1931ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கட்டடத்தில், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ளது.

கிட்டதட்ட, 135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த கட்டடம், மரங்கள் வளர்ந்தும், கூரை சேதமடைந்தும், விரிசல் ஏற்பட்டும் இருந்தது.

எனவே, இந்த கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பழமை மாறாமல் கட்டடத்தை சீரமைக்க, 24.20 கோடி ரூபாய் நிதியை, கடந்த ஆண்டு அரசு ஒதுக்கியது.

தொடர்ந்து, கட்டடத்தின் கூரை, கதவு, ஜன்னல், துாண்கள் சீரமைப்பு பணிகள், அண்மையில் துவங்கி நடந்து வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us