/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரை இல்லாத நிழற்குடை பயணியர் கடும் அவதி
/
கூரை இல்லாத நிழற்குடை பயணியர் கடும் அவதி
ADDED : ஜன 30, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, வண்டலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய வளாக நிறுத்தத்திற்குள் சென்று, பயணியரை ஏற்றிச் செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்தத்தை தினமும் 1,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதன் பராமரிப்பு படுமோசமாக உள்ளது. நிழற்குடைகளில் கூரை இல்லாமல் ஓட்டை, உடைசலாக காணப்படுகிறது.
முதியோர், குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிறுத்தத்தில் கூரை அமைக்க வேண்டும்.
- --மா.கேசவன்,
தாம்பரம்.