/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்
/
காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்
ADDED : ஆக 27, 2025 12:25 AM
ஓட்டேரி, ஓட்டேரியில் நாளை நடக்க இருந்த காதலனின் திருமணத்தை, இளம்பெண் தடுத்து நிறுத்தினார்.
ஓட்டேரியை சேர்ந்த கல்லுாரி மாணவியான 19 வயது இளம்பெண். இவரும், வீட்டருகே வசிக்கும் விஷ்வா என்கிற கலைச்செல்வன், 32, என்பவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கலைச்செல்வனுக்கு அவரது வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில், இதையறிந்த அப்பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின்படி கலைச்செல்வனிடம் விசாரித்த போலீசார், அவர் காதலியை திருமணம் செய்ய முடியாது என, திட்டவட்டமாக கூறினார். போலீசார் கலைச்செல்வனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.

