/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷட்டரை வெட்டி டாஸ்மாக் கடையில் திருட்டு
/
ஷட்டரை வெட்டி டாஸ்மாக் கடையில் திருட்டு
ADDED : டிச 10, 2024 12:26 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, நேமளூர் கிராமத்தில், 'டாஸ்மாக்' கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, முகத்தை மறைத்தபடி கையுறை அணிந்து, பேட்டரியால் இயங்கக்கூடிய கட்டிங் மிஷினுடன் மர்ம நபர் ஒருவர் வந்தார்.
டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை கட்டிங் மிஷினால் துண்டித்த அவரால், ஷட்டர் நடுவே உள்ள லாக்கை உடைக்க முடியாமல் போனது.
பின், அவர் எடுத்து வந்த கட்டிங் மிஷின் கொண்டு, ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஷட்டரை வெட்டி எடுத்து, உள்ளே சென்றார். அங்கிருந்து காலி மதுபான பெட்டியில் வைத்திருந்த விற்பனை பணம், 11,750 ரூபாயை திருடிச் சென்றார். கடையில் இருந்த மதுபானங்கள் திருடு போனதா என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.