sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தப்பிக்க முயன்ற வழிப்பறி திருடனுக்கு 'மாவுக்கட்டு'

/

தப்பிக்க முயன்ற வழிப்பறி திருடனுக்கு 'மாவுக்கட்டு'

தப்பிக்க முயன்ற வழிப்பறி திருடனுக்கு 'மாவுக்கட்டு'

தப்பிக்க முயன்ற வழிப்பறி திருடனுக்கு 'மாவுக்கட்டு'


ADDED : செப் 28, 2025 02:49 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்:போலீசாரிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்த வழிப்பறி திருடனுக்கு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

அயனாவரம், ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 60; ஆட்டோ ஓட்டுநர்.

கடந்த 23ம் தேதி இரவு சவாரி முடித்து, அரும்பாக்கம் கே.எச்., சாலையில் தேவி ஸ்டூடியோ அருகே நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், செல்வத்தை கத்தியால் வெட்டி, 750 ரூபாயை பறித்து தப்பினார்.

அயனாவரம் போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது அயனாவரம் மதுரை தெருவைச் சேர்ந்த மதன்குமார், 34, என, தெரிய வந்தது.

இவர், அயனாவரம் ஆவின் ஹைடெக் பாலக கட்டடத்தின் மேல் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

போலீசார் சுற்றிவளைப்பதை அறிந்த மதன்குமார், தப்பிக்க கட்டடத்தின் மேல் இருந்து குதித்தார்.

இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்த பின், போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us