sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநீர்மலை ஏரி ரூ.13 கோடியில் சீரமைப்பு பணி

/

திருநீர்மலை ஏரி ரூ.13 கோடியில் சீரமைப்பு பணி

திருநீர்மலை ஏரி ரூ.13 கோடியில் சீரமைப்பு பணி

திருநீர்மலை ஏரி ரூ.13 கோடியில் சீரமைப்பு பணி


ADDED : ஏப் 27, 2025 03:09 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீர்மலை:பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநீர்மலை பெரிய ஏரியின் பரப்பளவு, 194.01 ஏக்கர். தொடர் ஆக்கிரமிப்பால், 146.94 ஏக்கராக குறைந்து விட்டது.

தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் கலக்கிறது.

இவ்வேரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என, ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடந்த மாத பட்ஜெட்டில், இவ்வேரி, 5.15 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 13 கோடி ரூபாய் செலவில், இவ்வேரியை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை, அமைச்சர் அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தில், ஏரியில் உள்ள கழிவு நீரை வெளியேற்றி, துார்வாரி ஆழப்படுத்துதல், கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் பூங்கா, சுத்திகரிப்பு மையம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us