sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநின்றவூர் இ.பி., காலனி சாலை சீரமைக்கப்பட்டது; தினமலர் செய்தி எதிரொலி: 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய மாதர் சங்கம்

/

திருநின்றவூர் இ.பி., காலனி சாலை சீரமைக்கப்பட்டது; தினமலர் செய்தி எதிரொலி: 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய மாதர் சங்கம்

திருநின்றவூர் இ.பி., காலனி சாலை சீரமைக்கப்பட்டது; தினமலர் செய்தி எதிரொலி: 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய மாதர் சங்கம்

திருநின்றவூர் இ.பி., காலனி சாலை சீரமைக்கப்பட்டது; தினமலர் செய்தி எதிரொலி: 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய மாதர் சங்கம்


UPDATED : ஏப் 16, 2025 03:43 AM

ADDED : ஏப் 16, 2025 12:22 AM

Google News

UPDATED : ஏப் 16, 2025 03:43 AM ADDED : ஏப் 16, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர், திருநின்றவூர் நகராட்சி ஒன்றாவது வார்டில் பெரியார் நகர் சுரங்கப்பாதை அருகே, இ.பி., காலனி சாலை உள்ளது. கடந்த 2008ல் அமைக்கப்பட்ட இச்சாலை, 2014ல் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் இடறி விழுந்து விபத்தில் சிக்கினர்.

குறிப்பாக, சாலை வளைவில், 20 மீட்டர் துாரம் படுமோசமாக இருந்தது. கடந்தாண்டு ஜூலை மாதம், ஸ்கூட்டரில் அவ்வழியாக சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு, பள்ளத்தில் தவறி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகள் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இ.பி., காலனி சாலையை சீரமைக்க வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பி, சிமென்ட் கலவையால் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள், 15 நாட்களுக்குள் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். அதன்படி, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் கடந்தாண்டு தொடர்ந்து செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, இரு தினங்களுக்கு முன், அங்கு புதிதாக சாலை அமைத்துள்ளனர். இதனால், மகிழ்ச்சியடைந்த மாதர் சங்கத்தினர், நன்றி தெரிவிக்கும் விதமாக 'தினமலர்' நாளிதழ் செய்தியை போஸ்டராக்கி அப்பகுதி முழுக்க ஒட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us