sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது'

/

'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது'

'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது'

'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது'


ADDED : அக் 20, 2025 04:35 AM

Google News

ADDED : அக் 20, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது; இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவேற்காடு காடுவெட்டி பகுதியில், 1967-ம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவேற்காடு நகரை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர்.

காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்ததால், அதை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் நோக்குடன், 2022-ம் ஆண்டில், 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை, 7 கி.மீ., தொலைவில் நுாம்பல் பகுதியில் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது.

அங்கு, புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

நீண்ட தொலைவு, போக்குவரத்து வசதியும் இல்லை; சாலை வசதியும் இல்லை.

எனவே, காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம், இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும்.

நுாம்பல் புலியம் பேடில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us