sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் டிரைவரை தாக்கியோர் கைது

/

பஸ் டிரைவரை தாக்கியோர் கைது

பஸ் டிரைவரை தாக்கியோர் கைது

பஸ் டிரைவரை தாக்கியோர் கைது


ADDED : பிப் 15, 2024 12:58 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க., நகர், புழல், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 43; மாதவரம் பணிமனையில், தடம் எண் 242 பேருந்து ஓட்டுனர்.

கடந்த 11ம் தேதி, செங்குன்றத்திலிருந்து பாரிமுனைக்கு பேருந்தை இயக்கினார்.

கதிர்வேடு அருகே வந்த போது, ஆட்டோ டிரைவர் ஒருவர், ரெட்டேரி சந்திப்பு வரை பேருந்திற்கு வழி விடாமல் சென்றதால், ரெட்டேரி சந்திப்பில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம், ஓட்டுனர் மணிவண்ணன் புகார் அளித்தார்.

பயந்து போன ஆட்டோ டிரைவர், அங்கிருந்து தப்பினார். பின், பேருந்து அகரம் சந்திப்பு சிக்னல் அருகே நின்ற போது, அங்கு காத்திருந்த அதே ஆட்டோ டிரைவர், கல்லால் மணிவண்ணனை தாக்கிவிட்டு தப்பினார்.

இதில் காயமடைந்த அவர், திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், புழல் விநாயகபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 24, கொளத்துாரைச் சேர்ந்த பிரேம்குமார், 39, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் பிரேம்குமார் மீது, ஏற்கனவே 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us