sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளியை வெட்டி மொபைல்போன் பறித்தோர் கைது

/

தொழிலாளியை வெட்டி மொபைல்போன் பறித்தோர் கைது

தொழிலாளியை வெட்டி மொபைல்போன் பறித்தோர் கைது

தொழிலாளியை வெட்டி மொபைல்போன் பறித்தோர் கைது


ADDED : ஜன 05, 2024 01:04 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், வடமாநில தொழிலாளியை வெட்டி, அவரது மொபைல்போனை பறித்தோர் கைதாகினர்.

சென்னை புழல், இரட்டைமலை சீனிவாசன் தெருவில், வீட்டு உபயோகப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. அதில், பீகாரை சேர்ந்த நிரஞ்சன் சவுகான், 27; பாரம் துாக்கும் வேலை செய்து வருகிறார்.

அவர், கடந்த, 31ம் தேதி இரவு, மது போதையில், அந்த நிறுவனத்தின் வாசலில் நின்று, மொபைல்போனில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற மூவர், மது குடிக்க பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

அவர் பணம் கொடுக்க மறுத்தார். அதனால், ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால், அவரது தலையில் வெட்டினார். அதன் பிறகு அவர்கள், அவரது மொபைல்போனை பறித்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். படுகாயமடைந்த நிரஞ்சன் சவுகான், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விசாரித்த புழல் போலீசார், செங்குன்றம், தண்டல் கழனி, சாமியார் மடத்தை சேர்ந்த சதீஷ்குமார், 20; மொண்டியம்மன் நகரை சேர்ந்த நாகராஜ், 23; பம்மதுகுளம், கோணிமேடு, பொத்துார் பிரதான சாலையை சேர்ந்த முரளி, 22; ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 1 மொபைல் போன், 1 ‛பல்சர்' ரக இரு சக்கர வாகனம், 1 அடி நீளமுள்ள கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us