sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு மிரட்டல்

/

ரவீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு மிரட்டல்

ரவீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு மிரட்டல்

ரவீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு மிரட்டல்


ADDED : ஜன 30, 2025 12:47 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, ஜன. 30-

வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், வியாசர்பாடி பாலகிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 21 கிரவுண்ட் நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2022 செப்., 22ம் தேதி, நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சொத்து கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. பின் அங்கு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் துாய்மை பணி நடக்கிறது. இதை கோவில் பணியாளர்களான நந்தகுமார், பார்த்திபன், முத்தமிழ்செல்வி ஆகியோர், நேற்று முன்தினம் பார்வையிட சென்றனர்.

அப்போது அங்கு வந்த செல்வராஜ், அவரது மகன் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோர், கோவில் பணியாளர்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், பாலகிருஷ்ணன் தெருவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் உடைத்தனர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us