/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது
/
வக்கீலுக்கு வெட்டு மூன்று பேர் கைது
ADDED : டிச 30, 2024 01:31 AM
வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதன்குமார், 27, இவரது நண்பர் கருணாகரன்; இருவரும் வழக்கறிஞர்கள்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி, ஏ.எல்.முதலி தெருவில் உள்ள கடையில் 'பிரெட் ஆம்லெட்' சாப்பிட்டனர். போதையில் இருந்த கருணாகரன், 'பணம் தர முடியாது' என கூறியதாக கூறப்படுகிறது. இதை, கடை ஊழியர் அருண், கடை உரிமையாளரின் நண்பரான சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சதீஷ்குமார், 34, மற்றும் அவரது நண்பர்கள் ராஜா, 29, ராஜசேகர், 29, ஆகியோர் சேர்ந்து, கத்தியால் கருணாகரனை தாக்க முயன்றனர். அதை தடுக்க முயன்ற சுதன்குமாருக்கு, கையில் வெட்டு விழுந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன. வேளச்சேரி போலீசார், சதீஷ்குமார், ராஜா, ராஜசேகர் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

