sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துக்க நிகழ்வில் மது போதையில் தகராறு  வாலிபரை அடித்து கொன்ற மூவர் கைது

/

துக்க நிகழ்வில் மது போதையில் தகராறு  வாலிபரை அடித்து கொன்ற மூவர் கைது

துக்க நிகழ்வில் மது போதையில் தகராறு  வாலிபரை அடித்து கொன்ற மூவர் கைது

துக்க நிகழ்வில் மது போதையில் தகராறு  வாலிபரை அடித்து கொன்ற மூவர் கைது


ADDED : செப் 05, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க. :

கொளத்துாரில், துக்க நிகழ்ச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை அடித்துக் கொன்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.

கொளத்துார், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 64. இவர் கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வில், மஞ்சுளாவின் தம்பி கண்ணன், 58, அவரது மகன் அரவிந்த், 24, ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

அரவிந்த் மதுபோதையில் சுடுகாட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அரவிந்தை தாக்கியுள்ளனர்.

இதனால், மயக்கமடைந்த அரவிந்தை, அங்கிருந்தவர்கள் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அரவிந்தின் உறவினர், பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக், 33, என்பவர் கொடுத்த புகாரின்படி, திரு.வி.க., நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், அரவிந்தை தாக்கிய அமரர் ஊர்தி ஓட்டுநரான கொளத்துாரைச் சேர்ந்த மகேஷ், 27, வில்லிவாக்கம், அம்மன் குட்டை பகுதியைச் சேர்ந்த ராஜு என்ற முட்டை, 25, மற்றும் மேளம் அடிப்பவரான கொளத்துாரைச் சேர்ந்த நாகலிங்கம், 45, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us