sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது

/

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது


ADDED : மார் 21, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ராம்பாபு, 39, பிரகாஷ், 50, ஆகிய இருவரையும் அயனாவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் இரவு, அயனாவரம், ஜீவா பார்க் அருகே மூவரை பிடித்து சோதனை செய்ததில், சிறு, சிறு பொட்டலங்களாக 2.5 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

அயனாவரம், வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த காக்கா என்ற ஆகாஷ், 24, சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்த பூனை என்ற பிரித்திவிராஜ், 22, வில்லிவாக்கம் பிரவீன்குமார், 22, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மூவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அயனாவரம், தலைமைச் செயலக காலனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பது தெரிந்தது.

பூந்தமல்லி


பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் நேற்று, ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது, போலீசாருக்கு தெரிய வந்தது.

சென்னீர்குப்பம் ஆட்டோ ஓட்டுநர் சங்கர், 23, என்பவர் ஆகாஷ், 21, பிரவீன், 24, சையது ஈசாக்,19, ஆகியோர் ஆட்டோ ஓட்டுவது போல் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

ஆட்டோ, 1.5 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us