sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எலும்புக்கூடாக மாணவர் மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது

/

எலும்புக்கூடாக மாணவர் மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது

எலும்புக்கூடாக மாணவர் மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது

எலும்புக்கூடாக மாணவர் மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது


ADDED : நவ 02, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டைதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, ரெட்டித்தெருவை சேர்ந்தவர் தினேஷ், 19. சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை காணவில்லை என, அவரது குடும்பத்தினர் ஆக., 20ல் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.

நாயுடுபேட்டை நாகேஷ், 22, ஊத்துக்கோட்டை கார்த்திக், 22 மற்றும் 17வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை, தகராறு தொடர்பான வழக்கில் டி.எஸ்.பி., சாந்தி விசாரித்தார். அப்போது, அவர்களுக்கும் தினேஷுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன், தினேஷுடன், மூவரும், ஒரு திருநங்கையும் சேர்ந்து, கஞ்சா, மது அருந்த ஆந்திர மாநில எல்லையான சென்னேரி காவாங்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது காமேஷும் அங்கு வந்தார். தினேஷ், காமேஷ் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

காமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், மற்ற நான்கு பேரும் சேர்ந்து, அங்கு பள்ளம் தோண்டி, தினேஷ் உடலை புதைத்துள்ளனர்.

இவர்களில் காமேஷ் என்பவர், மற்றொரு வழக்கில் சிக்கி, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் இந்த விபரங்கள் தெரியவந்ததை அடுத்து, தினேஷின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சத்தியவேடு தாசில்தார் சுப்பிரமணி, ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, வெங்கல் ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலையில், திருவள்ளூர் மருத்துவக் குழுவினர், நேற்று முன்தினம் மதியம், தினேஷ் உடலை தோண்டி எடுத்தனர்.

எலும்புக்கூடாக மாறி இருந்த உடலை, அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

நாகேஷ், கார்த்திக் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனர், பூந்தமல்லி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us