sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்

/

கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்

கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்

கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்


ADDED : மே 25, 2025 08:25 PM

Google News

ADDED : மே 25, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி:மணலி தென்றல் நகரைச் சேர்ந்த அஜ்மல்கான், 30, மண்ணடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

வாரம்தோறும் கடையில் வசூலாகும் பணத்தை, டூ - வீலரில் வைத்து வீட்டு எடுத்து வருவார்; மறுநாள் வங்கியில் செலுத்திவிட்டு கடைக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு, கடையில் இருந்த, இரண்டு லட்ச ரூபாயை, 'யமஹா ரே' இரு சக்கர வாகன இருக்கைக்கு கீழ் வைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மணலி தென்றல் நகர் - பிரதான சாலையில் வரும்போது, அவருக்கு பின்னால், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், அஜ்மல்கானை இடித்து கீழே தள்ளினர்.

அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அவர் எழுவதற்குள், மூவரும் அஜ்மல் கானின் இருசக்க வாகனத்தின் இருக்கையை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

சுதாரித்த அஜ்மல்கான் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கூடவே, மர்ம நர்கள் தப்பினர். அப்போது அவர்கள் தவற விட்டுச் சென்ற பையில், கத்தி ஒன்று இருந்தது.

காயமடைந்த அஜ்மல்கான், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஜ்மல்கானின் நடவடிக்கைளை கண்காணித்து, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மணலி போலீசார் வழக்கு பதிந்து, மூன்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us