sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

/

106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

3


ADDED : ஏப் 23, 2025 11:53 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 11:53 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில், 238 சாலைகளில், 106 சாலைகளின் ஓரங்களில் மட்டுமே கடைகளை நடத்த மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. முதல்வர் தொகுதியில், 45 சாலைகள் உட்பட, 132 சாலைகளில் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனை பகுதிகளில் அனுமதி மறுப்பால், சாலையோர வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாடு முழுதும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபார முறைப்படுத்துதல் சட்டம், 2014ல் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை பின்பற்றி தமிழக அரசு, 2015ல், இதற்கான விதியை உருவாக்கியது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில், தெருவோர நகர வியாபாரிகள் குழு, மாநகராட்சி கமிஷனர் தலைமையில், 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில், நகர மருத்துவ அதிகாரி, சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர், தலைமை பொறியாளர் உட்பட ஒன்பது பேர் நியமன உறுப்பினர்களாகவும், ஆறு பேர் சாலையோர வியாபாரிகளால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இக்குழுவினர் அவ்வப்போது கூடி, சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், செய்யக்கூடாத இடங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில், 561 சாலைகளும், 35,730 தெருக்களும் உள்ளன. முதற்கட்டமாக, 238 சாலைகள் குழுவின் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டது.

அதில், நிலையான வியாபாரம், நகரும் வியாபாரம், பகுதி நேர வியாபாரம் என்ற அடிப்படையில், ராயபுரம் மண்டலத்தில், 24 இடங்கள், திரு.வி.க.நகரில், 16; மாதவரத்தில், 14 இடங்கள் என, 106 சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திரு.வி.க.நகரில், 43; ராயபுரத்தில் 22 உள்ளிட்ட 132 சாலைகளில் விற்பனை செய்யக்கூடாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தெருவோர கடை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலும், மக்கள் கூட்டம் இல்லாத மற்றும் பேருந்து வழித்தடம் இல்லாத சாலையாக அனுமதிக்கப்பட்டிருப்பதால், கடைகளுக்கு ஆட்கள் வராமல் வியாபாரம் பாதிக்கும் என, சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சாலையோர வியாபாரியும், நகர விற்பனை குழு உறுப்பினருமான பாலமுருகன் கூறியதாவது:

நகர விற்பனை குழுவில் பெரும்பாலும், அதிகாரிகள் தான் உள்ளனர். அவர்கள் சொல்லும் இடங்கள் தான், சாலையோர வியாபாரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

கொளத்துார் தொகுதியில் முதல்வர் வந்து செல்லும் சாலைகள் உட்பட 45 இடங்களில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் அமைந்துள்ள சாலைகளில், சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலும் ஏழை மக்கள் தான் வருகின்றனர். அங்கு சாலையோர உணவகம் இல்லையென்றால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

மக்கள் கூடும் இடங்கள், பேருந்து வழித்தட சாலைகள் உள்ளிட்டவை சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், உணவகம், காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபடுவோர் அதிகம் பாதிக்கப்படுவர்.

அத்துடன், சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத ஒதுக்கீட்டில், சாலையோர வியாபாரத்திற்கு அனுமதியும் தற்போது மறுக்கப்பட்டு வருகிறது.

வெயில் காரணமாக, சாலையோர வியாபாரிகள் கடையின் மேல் பந்தல் அமைத்தாலும், அதிகாரிகள் அகற்றி வருவதையும் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு, காவல் துறையின் பரிந்துரையின்படியே, சாலையோர வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்படாத இடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஒரே இடத்தில் அப்பகுதியின் அனைத்து சாலையோர வியாபாரிகளும் இருப்பதால், பொதுமக்கள் அவர்களை தேடி செல்வர். அதனால், சாலையோர வியாபாரம் பாதிக்கப்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவுன்சிலர்கள் ஆதிக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே, மாநகராட்சி தற்போது அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், இரவு நேர பிரியாணி, டிபன் கடைகள் என, 15,000க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கு, மாதாந்தர வாடகை என்ற பெயரில் 'கமிஷன்' கொடுக்கப்பட்டு, அதிகாலை வரை இயங்கி வருகிறது.



கவுன்சிலர்கள் ஆதிக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே, மாநகராட்சி தற்போது அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், இரவு நேர பிரியாணி, டிபன் கடைகள் என, 15,000க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கு, மாதாந்தர வாடகை என்ற பெயரில் 'கமிஷன்' கொடுக்கப்பட்டு, அதிகாலை வரை இயங்கி வருகிறது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us