/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
/
மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 21, 2024 12:16 AM
அடையாறு, கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் சந்திப்பு- ராஜிவ்காந்தி சாலையில் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சோதனை ஓட்டம் அடிப்படையில், வரும் 22ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் விபரம் வருமாறு:
அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜிவ்காந்தி சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
அந்த வாகனங்கள், 400 மீட்டர் துாரம் சென்று தரமணி சி.பி.டி., பாலிடெக்னிக் கல்லுாரி முன்புறம், 'யு - டர்ன்' செய்ய அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி செல்லலாம்.
கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ராஜிவ்காந்தி சாலை, நோக்கி செல்லும் வாகனங்கள், தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம்.
ராஜிவ்காந்தி சாலையில் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள், மத்திய கைலாஷ் கோவிலின் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணியரை இறக்கிவிட அனுமதிக்கப்படும்.
இந்த போக்குவரத்து மாற்றம், மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு. சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும் என, போக்குவரத்துபோலீசார் தெரிவித்துள்ளனர்.

